ஜோதிகா படத்தைத் தொடர்ந்து ஒடிடியில் கீர்த்தி சுரேஷ் படம்.. வரும் 19ம் தேதி ரிலீஸ்..

psychological thriller Penguin, Teaser Out on 8th June

நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் சமீபத்தில் தியேட்டர்காரர்களின் எதிர்ப்பையும் மீறி ஒடிடி தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படத்தை வரும் 19ம் தேதி ரிலீஸ் செய்கிறது. உளவியல் திரில்லர் திரைப்படமான இதில் கீர்த்தி இதுவரை ஏற்காத மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. வரும் 8 ஆம் தேதி படத்தின் டீஸர் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி படம் ஒடிடியில் ரிலீஸ் ஆகிறது.

You'r reading ஜோதிகா படத்தைத் தொடர்ந்து ஒடிடியில் கீர்த்தி சுரேஷ் படம்.. வரும் 19ம் தேதி ரிலீஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தளபதி 65 அப்டேட்: விஜய்யுடன் நடிக்கும் விஜய்சேதுபதி ஹீரோயின்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்