ஐஸ்வர்யா ராய் மாஜி மேனேஜர் தற்கொலை.. 14வது மாடியிலிருந்து கீழே குதித்தார்..

Aishwarya ex-manager Disha Salian commits suicide

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோரிடம் மேனேஜராக பணிபுரிந்தவர் திஷா சலைன். தற்போது இந்தி நடிகர் வருண் சர்மாவிடம் மேனேஜராக இருந்து வந்த இவர் மும்பை மாலட் பகுதியில் உள்ள அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்தார்.

நேற்று மாலை இவர் திடீரென்று அடுக்குமாடிக் குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் அவருடன் அவரது வருங்கால கணவர் உடனிருந்தார்.மாடியிலிருந்து கீழே குதித்த திஷாவை உடனடியாக மீட்டு போரிவெளி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் திஷா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை.

You'r reading ஐஸ்வர்யா ராய் மாஜி மேனேஜர் தற்கொலை.. 14வது மாடியிலிருந்து கீழே குதித்தார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ் பட இயக்குனர் திடீர் மரணம்.. நடிகை சஞ்சனா சிங் அஞ்சலி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்