நடிகர் சுஷாந்த் மரணம் அறிந்து ரசிகை உள்ளிட்ட 2 பேர் தற்கொலை..

13 year old Girl and 55 Year Old Fan dies by suicide after Sushant Singh Rajputs death

இந்தி நடிகரும் கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்துக் கவர்ந்தவருமான சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்னும் பல சாதனைகள் படைப்பார் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் கடந்த 14ம் தேதி மும்மையில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஒடிசாவின் கட்டாக்கின் ஜோப்ரா பகுதியில் மாணவி சரஸ்வதி ஷிஷு (வயது 13) . இவர் சமீபத்தில் ஒன்பதாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து அறிந்ததிலிருந்து கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் . வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல் மற்றொரு சம்பவத்தில், நடிகர் சுஷாந்த்தின் 55 வயதான ரசிகர் ஒருவர் கட்டாக்கில் உள்ள தனது அலுவலகத்தின் ஒரு அறைக்குள் சுஷாந்த் போலவே மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது பெயர் சேர்ந்த நிரஞ்சன் ரூட். ஜகத்சிங்பூரைச் சேர்ந்தவர்.இதுகுறித்து கட்டாக் டி.சி.பி அகிலேஸ்வர் சிங் கூறும்போது, சுஷாந்த் சிங் மரணத்தை அறிந்து 13 வயது இளம் பெண் மால்கோ டவுனில் தனது அறையில் தூக்கில் இறந்தார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் வேறு காரணமாக இருந்தால் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

You'r reading நடிகர் சுஷாந்த் மரணம் அறிந்து ரசிகை உள்ளிட்ட 2 பேர் தற்கொலை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குடும்பத்தினருக்குச் சாப்பாடு செய்வதே மன நிம்மதி.. பிரபல நடிகை சொல்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்