கொரோனா டெஸ்ட்: ஐஸ்வர்யாராய் என்ன ஆனார்?

Aiswaryarai COVID 19 Test Negative

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் அவரது மகன் நடிகர் அபிஷேக்பச்சன் இருவருக்கும் நேற்று இரவு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக் காக இரவோடு இரவாக அனுமதிக்கப் பட்டனர். அமிதாப் மருமகளும் அபிஷேக் பச்சன் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.
அவர் ஏற்கனவே மணி ரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். வரும் செப்டம்பரில் அப்படத்தின் படப்பிடிப்பை புனேவில் தொடங் திட்டமிட்டிருந்த நிலையில் குடும்பத்தில் மாமனார் அமிதாப், கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தனக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்று பயந்தார். ஆனால் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

இதனால் அவர் ஆறுதல் அடைந்தார். ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யாவுக்கும் மாமியார் ஜெயா பச்சனுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும்
தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அமிதாப் மற்றும் அபிஷேக் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் ஐஸ்வர்யாய் மற்றும் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.

You'r reading கொரோனா டெஸ்ட்: ஐஸ்வர்யாராய் என்ன ஆனார்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்கிற்கும் கொரோனா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்