என் பெயரில் வெளியிடப்படும் போலிச் செய்திகள்.. பிரபல இயக்குனர் இறுதி எச்சரிக்கை..
DirectorThangerpachaan Caution Statement
பள்ளிக்கூடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:அண்மை காலமாகவும் கடந்த காலங்களிலும் என் உருவப்படங்களைப் பயன்படுத்தியும், என் பெயரைப் பயன்படுத்தியும் போலிச் செய்திகள் உலவுகின்றன. இன்று கூட " சாத்தான் குளம் இரட்டைக் கொலை" குறித்த என் பெயரில் உலவும் செய்தி ஒன்றினை நண்பர் அனுப்பி வைத்திருந்தார். இன்று வரை இக்கொலைகள் குறித்த எந்த கருத்தையும் நான் தெரிவிக்காத நிலையில் இப்படிப்பட்ட ஒரு செய்தியை வெளியிட்டவர் தண்டனைக்கு உள்ளாவார்.
இணையக் கூலிகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் இது போன்ற செய்திகளை இனிமேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் என் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என உணர்ந்தபடியால் இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கின்றேன்.நான் பேசினாலும், எழுதினாலும், அறிக்கை விடுத்தாலும் எனது கைப்பேசி எண்களிலிருந்து இயங்கும் WhatsApp, எனது Twitter, Facebook இவைகளில் மட்டுமே அச்செய்திகள் வெள வரும். இவைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமே அச்சு ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் தரப்படும். எனவே எனது கணக்கில் இயங்கும் இவைகளில் வெளியாகும் செய்திகள் மட்டுமே என்னுடையவை.இனி என்னுடைய பெயரில் எந்த செய்திகள் வெளிவந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் மேல் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இறுதி எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தங்கர்பச்சான் தெரிவித்திருக்கிறார்.
You'r reading என் பெயரில் வெளியிடப்படும் போலிச் செய்திகள்.. பிரபல இயக்குனர் இறுதி எச்சரிக்கை.. Originally posted on The Subeditor Tamil