நடிகை வனிதா டிவிட்டரிலிருந்து திடீர் விலகல்.. மோதல் முற்றிய நிலையில் திடீர் முடிவு..

Actress Vanitha Left From Twitter

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மணந்தார். இது பெரும் சர்சையாகி உள்ளது. வனிதா 3வதாக பீட்டர் பாலை மணந்ததை நடிகைகள் லட்சுமி ராம கிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் விமர்சனம் செய்தனர். இது வனிதாவை கோபப்படுத்தியது. அவர்கள் இருவரையும் கடுமையாக திட்டினார். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் வீடியோ கான்பிரன்சிங்கில் பேசிய வனிதா அவரை ஒருமையில் பேசியதுடன் கஸ்தூரியை காமெடி பீஸ் என்று சொல்லி தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து தடை செய்தார்.

முன்னதாக தனது திருமணம் பற்றி விமர்சித்த சூரியா தேவி என்பவர் மீது போலீசில் புகார் அளித்தார். சூரியா தேவி போதை பொருள் விற்பவர் அவர் தனது தவறை மறைக்க என் திருமணம் பற்றி விமர்சிக் கிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் . அதற்கு பதிலடியாக வனிதா மீது சூர்யா தேவி போலீசில் புகார் அளித்தார். இருவரையும் போலீஸார் சமாதான பேச்சுக்கு அழைத்து பேசினர். அதில் சமரசம் ஏற்படவில்லை.
வனிதாவுக்கு சாதகமாக நெட்டில் ஒரு தரப்பின்ர் ஆதரித்தாலும் இவர்களின் மோதலை பலரும் எதிர்த் தனர். வனிதாவுக்கு பலர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். உச்சகட்டத்தில் நடிகைகளின் மோதல் நிகழ்ந்த நிலையில் தற்போது வனிதா டிவிட்டர் பக்கத்திலிருந்தே வெளி யேறிவிட்டார். அதற்கான காரணம் தெரியவில்லை. இதுவும் பல்வேறு கேள்வி களை எழுப்பி உள்ளது.

You'r reading நடிகை வனிதா டிவிட்டரிலிருந்து திடீர் விலகல்.. மோதல் முற்றிய நிலையில் திடீர் முடிவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திரிஷாவை மணக்கிறார் சிம்பு? நெட்டில் தீயாய் பரவும் புதிய பரபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்