கொரோனாவை பற்றி கவலைப்படாத கமல் நடிகை..

Actress Manisha Koirala doesnt care about Coronavirus

கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகளே பயத்தில் உள்ளது. கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரசைக் கண்டு எனக்குப் பயம் இல்லை என்கிறார் பிரபல நடிகை.

கமல்ஹாசனுடன் இந்தியன், மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான், ரஜினியுடன் பாபா, அர்ஜுனுடன் முதல்வன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மனீஷா கொய்ராலா.
திரைப்படங்களில் நடித்து வந்த மனீஷா கடந்த 2012ம் ஆண்டு கேன்சர் நோய் தாக்குதலுக்குள்ளானார். இதையடுத்து அமெரிக்கா சென்றவர் 1 வருடம் அங்குள்ள பிரபல மருத்துவமனையில் தங்கி அறுவை சிகிச்சை செய்து, கீமோ தெரபி சிகிச்சைகள் பெற்றுக் கொண்டார். ஒரு வருடக் கடுமையான வலிகளை அனுபவித்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணம் அடைந்தார்.

மனீஷா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: என் வாழ்வில் மிகவும் மோசமான தருணங்களை சந்தித்து விட்டேன். அதை ஒப்பிடும்போது கோவிட் 19 உள்ளிட்ட வேறு எதுவுமே எனக்குப் பயத்தைத் தரவில்லை. நான் அமைதியாக இருக்கிறேன். தியானம் மற்றும் யோகா செய்கிறேன். எனது வாழ்கையை மரம் செடி கொடிகளுடன் இயற்கையாகக் கழிக்கிறேன். இயற்கையோடு இணைந்து வாழ்கிறேன். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் மும்பையில் பறவைகளின் சத்தம் கேட்கிறது. எனது பெற்றோருடன் நேரத்தைச் செலவழிக்கிறேன். இதற்கு முன் இவ்வளவு அமைதியும் நிம்மதியும் நான் அனுபவித்தது கிடையாது.

இவ்வாறு மனீஷா கொய்ராலா கூறியுள்ளார்.

You'r reading கொரோனாவை பற்றி கவலைப்படாத கமல் நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காட்டுக்குள் தன்னையே தேடி சென்ற பிரபல நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்