நெற்றியில் தோட்டா: ரத்த காயத்துடன் நடிகரின் ஃபர்ஸ்ட் லுக்..

ஒன்றரை வருடத்துக்குப் பிறகு சிம்பு படங்களில் படு வேகமாக நடிக்க வந்திருக்கிறார். சிம்பு படம் எடுத்தால் வருடக் கணக்கில் இழுத்து விடுவார் என்ற பழம் கதைகளை உடைத்து விட்டார். சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் 40 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து டப்பிக்கும் பேசி முடித்தார். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு சிம்பு, மாநாடு படத்தில் நடித்தார்.

ஐதராபாத் ராமோஜி பிலிம் ஸ்டூடியோவில் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கு அமலானதும் இதன் படப்பிடிப்பு நின்றது. ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்பு தொடங்கியதும் தான் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் மாநாடு படப் பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக் குழு வெளியிட்டுள்ளது.

சிம்புவின் நெற்றியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து ரத்த காயங்களுடன் இருக்கும் போஸ்டர் நெட்டில் வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். சுரேஷ் காமாட்சி இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.இதில் சிம்புவுக்கு ஜோடியாகக் கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார் . பாரதிராஜா எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் ஃபர்ஸ்ட் லுக் பாம்பைக் கையில் பிடித்தாக விலங்குகள் நல வாரியம் விளக்கம் கேட்டுப் பட குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் தற்போது முஸ்லிம் தோற்றத்தில் தலையில் தொப்பி வைத்துக்கொண்டு நெற்றியில் குண்டுக் காயத்துடன் இருக்கும் சிம்புவின் தோற்றம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading நெற்றியில் தோட்டா: ரத்த காயத்துடன் நடிகரின் ஃபர்ஸ்ட் லுக்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்