நடிகையின் கணவர் ஹீரோவாக அறிமுகம்.. நட்சத்திர குடும்பம் புதுதிட்டம்..

தமிழில் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தில் நடித்தவர் நிஹாரிகா. இவர் நடிகர் சிரஞ்சீவி அண்ணன் நாகபாபு மகள். சில தெலுங்கு படத்திலும் நடித்தார். நிஹாரிவுக்கு சைதன்யா ஜொன்னலகடாவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ஓட்டலில் திருமண ஏற்பாடு செய்தனர். திருமண பணிகளைக் கவனிக்க ஒரு வாரத்துக்கு முன்பே நிஹாரிசிகா ராஜஸ்தான் சென்று திருமண வேலைகளை பார்க்கத் தொடங்கினார்.

சுமார் 10 நாட்களுக்கு முன்னதாகவே திருமண சம்பிரதாயங்கள் தொடங்கின. தவிர மெஹந்தி, சங்கீத் இசை நிகழ்ச்சி எனப் பல கொண்டாட்டங்கள் நடந்தன. குடும்பத்தினருடன் சேர்ந்து சிரஞ்சீவி, ராம் சரண் நடனம் ஆடினார்கள். கடந்த டிசம்பர் 9ம் தேதி குடும்பத்தினர், நட்சத்திரங்கள் சூழ திருமணம் நடந்தது. பிறகு அங்கேயே இரவில் திருமண வரவேற்பும் நடந் தது. பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஐதராபாத் திரும்பினார். திருமண விழாவுக்கு உதய்ப்புர் வரமுடியாதவர்களுக்காக ஐதராபாத்தில் மற்றொரு திருமண வரவேற்பு நடந்தது.

இதில் திரையுலகினர் நண்பர்கள் கலந்து கொண்டனர். நிஹாரிகாவின் இந்த திருமண வரவேற்பில் ராம் சரண் மீண்டும் கலந்து கொண்டார். நிஹாரிகா இனி சினிமாவில் நடிக்கும் எண்ணத்தில் இல்லை ஆனாலும் அவரது கணவர் சைதன்யா நடிகருக்கான முகவெட்டு கொண்டவராக இருக்கிறார் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அவர் விரைவில் ஹீரோவாக அறிமுகமாவார் என்று பேச்சு எழுந்துள்ளது.சிரஞ்சீவி குடும்பத்தில் பெரும்பாலும் எல்லோருமே நடிகர்களாக உள்ளனர். அவரது மகன் ராம் சரண், சிரஞ்சீவி சகோதரர்கள் பவன் கல்யாண், நாகபாபு, நாகபாபு மகன் வருண் தேஜ், மகள் நிஹாரிகா மற்றும் சிரஞ்சீவி மருமகன் கல்யாண் தேவ் என எல்லோருமே நடிகர்கள் என்பதால் நிஹாரிகா கணவர் சைதன்யாவும் விரைவில் நடிகராக அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து இன்னும் சிரஞ்சீவி குடும்பம் சார்பாக அதிகாரப்பூரவாக அறிவிப்பு எதுவும் வரவில்லை.

You'r reading நடிகையின் கணவர் ஹீரோவாக அறிமுகம்.. நட்சத்திர குடும்பம் புதுதிட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கடுமையான ஆக்ஷன் ஷுட்டிங்கை முடித்த புற்றுநோய் பாதித்த நடிகர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்