பிரபல நடிகை மீது போலீசில் புகார்..

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிரபல நடிகை ஓவியா. ஆரவை காதலித்து காதல் தோல்வி ஏற்பட்டதால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்று பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அதன்பிறகு ஓவியாவுக்கு ஓவியா ஆர்மி என்ற ரசிகர்கள் கூட்டம் உருவானது. ஓவியாவின் செயல்களுக்கு இந்த ஆர்மி துணையாக இருந்து வருகிறது. இதுவரை ஓவியா அரசியல் பற்றி கருத்து பகிர்ந்ததில்லை. ஆனால் திடீரென்று தனது இணைய தள டிவிட்டர் பக்கத்தில் நேற்று முன் தினம் அரசியல் அதிரடி கிளப்பி பலரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தினார்.

பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்க்கும் வகையில் ஓவியா டிவிட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் பகிர்ந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்து விழாவில் பங்கேற்றுவிட்டு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆனால் ஒவியா திடீரென்று மோடிக்கு எதிராக இப்படியொரு ஹேஷ் டேக் போட்டது அவர் அரசியலில் ஈடுபட மேற்கொண்டுள்ள முடிவா? அல்லது யாராவது அவரது டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து இப்படி போட்டிருக்கிறார்களா என்ற சலசலப்பு எழுந்தது. அவரது ரசிகர்கள் இந்த டிவிட்டை வைரலாக்கினர்.

இந்நிலையில் நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக வக்கீல் அணியினர், சென்னை போலீசில் புகார் அளித்து உள்ளனர். ஓவியாவின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பற்றி இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை.ஓவியா தற்போது தமிழில் ராஜபீமா, பிளாக் காஃபி, சம்பவம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

You'r reading பிரபல நடிகை மீது போலீசில் புகார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காதலை தினமும் கொண்டாடுங்கள்.. நடிகை நயன்தாரா சூப்பர் ஐடியா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்