சமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா?

நடிகை சமந்தா 2010ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானார். அதன்பிறகு பாணா காத்தாடி படத்தில் ஹீரோயினாக நடித்தார், தொடர்ந்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இதற்கிடையில் தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அறிமுகமான நடிகை திரைத்துறையில் நீண்ட தூரம் பயணம் செய்துள்ளார்.

சமந்தா திரையுலகில் தற்போது 11 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். நடிகையின் ரசிகர்கள் அவரது சாதனையை கொண்டாடச் சிறப்பு டி.பி. பகிர்ந்தனர்.பிரபல நடிகை கீர்த்தி சுரேஷும் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டருடன் மெசேஜ் வெளியிட்டிருக்கிறார். அவர் கூறும்போது,திரையுலக பயணத்தில் 11 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள். பண்புடன் கூடிய ஒரு நபராகவும் ஒரு தொழில் நிறுவனராகவும் மற்றும் சிறந்த நடிகையாகவும் வளர்ந்திருப்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் பல வருடங்கள் உங்களுக்குப் பலவேறு வெற்றிகள் வந்து சேர வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

சமந்தா தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் சாகுந்தலம் புராண படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார். இப்படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த ருத்ரம்மாதேவி படம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி அளித்தவர்.சாகுந்தலம் படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். அவர் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு சாகுந்தலம் படத்தில் நடிக்க சமந்தா ஒப்புக்கொண்டார். இதில் ஹீரோவாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

You'r reading சமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்