ஹோட்டல் உரிமையாளரிடம் ஏமாந்த நடிகை நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணியிடம் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

"1983 " என்ற மலையாளப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நிக்கி கல்ராணி, அவரின் முதல் படத்தின் மூலம் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

டார்லிங், யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவருக்கு மூத்த சகோதரி.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நிக்கி கல்ராணி. பெங்களூரு அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் மீது ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் நிகில். இவருடைய ஹோட்டலில் கடந்த 2016-ம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தேன். இதற்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக நிகில் கூறியிருந்தார். ஆனால் இதுவரை நிகில் எனக்கு பணம் தரவில்லை. மேலும், என்னிடம் வாங்கிய 50 லட்சம் ரூபாயையும் திரும்பத் தரவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை நிகிலிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணி அளித்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading ஹோட்டல் உரிமையாளரிடம் ஏமாந்த நடிகை நிக்கி கல்ராணி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆஞ்சநேயர் எங்கு பிறந்தார் என்று தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்