கேரளா முன்னணி நடிகர் பகத் பாசில் படங்களுக்கு சிக்கல்?

பிகத் பாசில் படங்களை திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிடுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திரையுலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டன.

ஊரடங்கில் பல மாதங்கள் மூடப்பட்ட திரையரங்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்க அமல்படுத்தப்பட்டுள்ளனர். திரையரங்குகளில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில் திரையரங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஊரடங்க தளர்விக்கு பின்பும் புதிய படங்களை திரையரங்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வந்துள்ளன.

மலையாளத்தில் பகத் பாசில் நடித்துள்ள சி யூ சூன், இருள், ஜோஜி ஆகிய படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளன. திரையரங்கள் திறந்த பிறகும் பகத் பாசில் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாவதால் அவரது படங்களை இனிமேல் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பகத் பாசில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தடை குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

You'r reading கேரளா முன்னணி நடிகர் பகத் பாசில் படங்களுக்கு சிக்கல்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈராக்கில் கார் குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்