கர்ணனுக்கு பிறகு மீண்டும் கைகோர்க்கும் தனுஷ் – மாரிசெல்வராஜ் கூட்டணி!

கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதனை தனுஷ் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பரியேறும் பெருமாளைத் தொடர்ந்து தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய படம் கர்ணன். எக்கச்சகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் கடந்த 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பொதுமக்களிடையே படம் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமில்லாமல் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியது. வசூல் ரீதியாகவும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டினர். இந்த படத்தைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். கபடியை மையமாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் – தனுஷ் காம்போ மீண்டும் புதிய படத்திற்காக இணைகிறது. இதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (ஏப்ரல் 23) உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கூறியிருப்பதாவது: 'கர்ணன்' திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முன் தயாரிப்பு நடக்கிறது, அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்'' என்று தனுஷ் பதிவிட்டுள்ளார். தனுஷின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். துருவ் விக்ரம் படத்துக்கு பிறகு இந்த படத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

You'r reading கர்ணனுக்கு பிறகு மீண்டும் கைகோர்க்கும் தனுஷ் – மாரிசெல்வராஜ் கூட்டணி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிறுமிக்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு பொதுமக்கள் கொடுத்த சூப்பர் பரிசு..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்