அமெரிக்காவில் கடத்தல்காரனை பிடிக்க முயன்ற போலீஸ் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்திலுள்ள நோகாலஸ் என்ற இடத்தில் கார் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. காரை கடத்தியவனை பிடிக்க முயன்றபோது, அவன் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி பரிதாபமாக பலியானார்.
கடந்த வெள்ளிக்கிழமை, பிற்பகல் 2:40 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நார்த் கிரவுண்ட் அவென்யூ என்ற பகுதியில் கார் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து காவல் அதிகாரி ஜீசஸ் கார்டோவா (வயது 44) அங்கு சென்றுள்ளார். காரை கடத்தியவனை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, காரை விட்டு இறங்கிய கடத்தல்காரன், போலீஸ் அதிகாரியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு, இன்னொரு காரை கடத்தி தப்பிச் சென்றுள்ளான்.
சுடப்பட்ட காவல் அதிகாரி ஜீசஸ் கார்டோவா சிகிச்சை பலனின்றி ஹோலி கிராஸ் மருத்துவமனையில் மாலை 4 மணியளவில் உயிரிழந்தார். காரை கடத்தியவன், மூன்றாவதாக ஒரு காரையும் கடத்தி தப்பிச் சென்றபோது, போலீஸ் துரத்தியதால், வெஸ்ட் மரிபோஸா சாலை அருகே காரை விட்டு இறங்கி ஓடும்போது கைது செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அமெரிக்காவில் கடத்தல்காரனை பிடிக்க முயன்ற போலீஸ் சுட்டுக்கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதல்வரின் கருத்து என்னை காயப்படுத்தி விட்டது - உலக அழகி வேதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்