மனைவியின் கள்ளக் காதலனை கொன்ற சப் இன்ஸ்பெக்டர்

Sub inspector who killed his wifes love lover

தூத்துக்குடியில் தனது மனைவியின் கள்ளக்காதலனை சப் இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்தூரை சேர்ந்தவர் பிரான்சிஸ். மத்திய ரிசர்வ் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி அந்தோணி பவுலின். இவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்தோணி பவுலின் பள்ளியில் தன்னுடன் வேலைப் பார்த்து வந்த அந்தோணி துரைராஜ் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்துவந்துள்ளார். இதனை கண்டுபிடித்த பிரான்ஸிஸ் பலமுறை மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் திருந்தியபாடில்லை.

தாயின் கள்ளத்தொடர்பால் மனமுடைந்த அந்தோனி பவுலின் மகள் சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அந்தோணி துரைராஜால் தான்இவ்வளவு பிரச்சனை, அவனை தீர்த்துக்கட்ட வேண்டும் என சரியான சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்தார் பிரான்ஸிஸ். அதன்படி தனியாக சிக்கிய அந்தோனி துரைராஜை பிரான்ஸிஸ் சரமாரியாக வெட்டினார். இதில் அந்தோணி உயிரிழந்தார்.

கள்ளக்காதலால்  இரு குடும்பங்கள் சீரழிக்கப்பட்டது தூத்துக்குடியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading மனைவியின் கள்ளக் காதலனை கொன்ற சப் இன்ஸ்பெக்டர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பகவத் கீதையுடன் பாகிஸ்தான் திரும்பும் சிறைவாசி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்