காலை எழுந்ததும் இதைப் பருகினால் உடலுக்கு நல்லது.!

காலை உணவுக்கு முன்பாக நீராகாரங்கள் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. காலை எழுந்தவுடன் காபி குடிப்பதற்குப் பதிலாக நீராகாரங்கள் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

தண்ணீர் :

தினமும் காலை எழுந்தவுடன் குறைந்தபட்சம் 500 மில்லி அளவு தண்ணீர் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது.

தினமும் தண்ணீர் குடிப்பதால், நம் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தை 25மூ வரை வேகப்படுத்தும்.

எலுமிச்சை நீர் :

தினமும் காலையில் தண்ணீரில் எலுமிச்சை நீரை கலந்து குடித்து வந்தால் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.  மேலும், குடல் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும்.

பூண்டு நீர் :

வெறும் வயிற்றில் பூண்டை நன்கு இடித்து, அதை நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும். மேலும், கல்லீரல் நன்கு செயல்பட உதவும்.

மஞ்சள் நீர் :

தினமும் காலையில் எழுந்ததும் நீரில் மஞ்சளை கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவானது குறையும்.

கிரீன் டீ :

காலையில் எழுந்ததும் கிரீன் டீ பருகி வர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.  உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

இஞ்சி டீ :

காலையில் எழுந்ததும் இஞ்சி டீ குடித்து வர, புத்துணர்ச்சி கிடைக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

You'r reading காலை எழுந்ததும் இதைப் பருகினால் உடலுக்கு நல்லது.! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெரியார், லெனின் சிலை உடைப்பு விவகாரம் - கருத்தை வாபஸ் வாங்கினார் எச்.ராஜா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்