கண்களில் புரை பிரச்சனையா?? எப்படி குணப்படுத்துவது??

கண்கள் எவ்வளவு முக்கியம் என்பது பார்வையில்லாத நபர்களுக்கு தெரியும். ஒரு முறை இந்த உலகத்தை பார்த்துவிடமாட்டோமா? என்பது பலரின் குமுறல்கள். இந்த உலகத்தின் அழகை காணமுடியாதவர்களுக்கு கண்கள் ஒரு பொக்கிஷம். ஆனால் கண்கள் இருந்தும் அதை சரியாக பராமரிக்காமல் கண் பார்வையை குறைத்து கொள்கிறோம். கண்கள் நமக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் அதை நாம் அன்போடு தழுவ வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பார்வைக் குறைபாட்டால் இளம் வயதிலேயே கண்ணாடி அணியும் நபர்கள் அதிகரித்து வருகிறார்கள். எந்த வகையில் நாம் பார்வையை இழக்கிறோம் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்:-

லேப்டாப் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்வது மட்டுமல்லாமல், மீதி நேரத்தில் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பது, வெளிச்சம் குறைந்த இடங்களில் படிப்பதை, மற்ற செயல்கள் செய்வதை தவிருங்கள். குறைந்த வெளிச்சத்தில் கண்களுக்கு வேலை தருவது நல்லதல்ல. பச்சை நிறக் காய்கறிகள், கேரட், பப்பாளி, நெல்லி, மாம்பழம், கீரைகள், முட்டை, மீன், வெள்ளரி, பாதாம் போன்றவை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.அதிகம் வெயில் இருக்கும் காலங்களில் கூலிங் கிளாஸ் அணிவது நல்லது.கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் நேரங்களில் ஒரு மணி நேர இடைவெளியில் இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்த்து, கண்களுக்கு ஓய்வளியுங்கள்.

கண்களில் அழுத்தமோ, எரிச்சலோ இருந்தால் உடனடியாக குளிர்ந்த நீரில் கண்களை கழுவி ஒரு 5 நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் டிவி,கணினி, செல்போன் போன்றவற்றை பார்ப்பதை தவிருங்கள்.ஒரு ரப்பர் பந்தை எடுத்து, அதனை சுவற்றில் எரிந்து அந்த பந்து செல்லும் திசைகளிலெல்லாம் உங்கள் பார்வையை திருப்புங்கள். இது கண்ணுக்கான சிறந்த பயிற்சி. உடல் பாகங்களைப் போல் நீர்ச்சத்து இல்லை என்றால் கண்களும் வறட்சி அடையும். எனவே தண்ணீரை சரியாக குடியுங்கள்.தூசிகளால் கண்கள் அதிகம் பாதிக்கப்படையும், எனவே வெளியில் சென்று வந்தவுடன், சுத்தமான நீரினால் கண்களை கழுவுங்கள்.தினமும் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும்.

You'r reading கண்களில் புரை பிரச்சனையா?? எப்படி குணப்படுத்துவது?? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்