அஸ்ஸாமில் விஷ சாராய பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு- 331 பேருக்கு தீவிர சிகிச்சை

Assam hooch tragedy toll rises to 124

அஸ்ஸாமில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 331 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் ஜோத்பூர் மாவட்டங்களில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கடந்த வியாழன்று கள்ளச் சாராயம் அருந்தினர். இதை குடித்த 500க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதுவரை மொத்தம் 124 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 331 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

You'r reading அஸ்ஸாமில் விஷ சாராய பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு- 331 பேருக்கு தீவிர சிகிச்சை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ’தலைவி’... ஜெ. வாழ்க்கையை படமாக்கும் இயக்குநர் ஏ.எல். விஜய்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்