இலங்கை பிரதமர் ரணில் இன்று திருப்பதி வருகை

SL PM Ranil to visit Tirupati on today

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று திருப்பதி வருகை தருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை பிரதமர்கள், அதிபர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே அடிக்கடி திருப்பதி வந்து சென்றார்.

அப்போது அவருக்கு வைகோ உள்ளிட்டோர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று திருப்பதி வருகை தருகிறார்.

இன்று பிற்பகல் கொழும்பில் இருந்து சென்னைக்கு வருகை தரும் ரணில் சாலை மார்க்கமாக திருப்பதி செல்கிறார். இன்று இரவு திருப்பதியில் தங்கிவிட்டு நாளை அதிகாலையில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

அதன்பின்னர் நாளை பிற்பகல் சென்னையில் இருந்து கொழும்பு திரும்புகிறார் ரணில். இதையடுத்து திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

You'r reading இலங்கை பிரதமர் ரணில் இன்று திருப்பதி வருகை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தென்சென்னை, திண்டுக்கல், கரூர்... உதயநிதி ஸ்டாலினை லோக்சபா தேர்தலில் களம் இறக்க ஆழம் பார்க்கிறதா திமுக?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்