மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி!

Presidential rule in West Bengal

மேற்கு வங்காள முதல்­வர் மம்தா பானர்ஜிக்கும் கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. ஜெக­தீப்தங்கர் மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்­ பட்டு வருகிறார் என்று திரி­ணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளும் மாநில அமைச்சர்களும் சாடி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்­டது என்று மத்திய அர­சுக்கு ஜெகதீப்தங்கர் அறிக்கை அனுப்பி உள்­ளார். எனவே மம்தா பானர்ஜி அரசு தேர்தல் வரை தொடர்ந்து நீடிக்குமா அல்லது ஓரிரு வாரங்­களில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படுமா என்ற கேள்வி விஸ்வரூபம்
எடுத்துள்ளது.

சட்­டம், ஒழுங்கு சீராகா­விட்­டால் மேற்குவங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க தயங்கமாட்டோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்­ளது. இதனையடுத்து மத்திய அரசு மீதான தாக்குதலை மம்தாபானர்ஜி மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். அமித்ஷாவின் இந்த பேட்டியை பா.ஜ.க.வினர் வரவேற்றுள்ளனர். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மீண்டும் மலையாளத்திற்கு செல்லும் நயன்தாரா.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்