தமிழகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு நேரடி இரயில் சேவை தொடங்கியது!
ஓசூர் தமிழக, கர்நாடக மாநில எல்லையிலுள்ள நகரமாகும். இங்கு ஆயிரக்கணக்கான
தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் பல்வேறு வகையான உதிரிபாகங்கள், பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
சாலை வழியாக புதிய வாகனங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் அனுப்பி வைத்தால் அதற்கு அதிக செலவு மற்றும் குறித்த நேரத்துக்கு கொண்டு செல்வதில் சிக்கல், வாகனங்கள் சேதம் உள்ளிட்ட இடையூறுகளை சந்திக்க வேண்டியிருந்தது.
இதைக் கருத்தில் கொண்ட தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் ஓசூரில் இருந்து வங்காளதேசத்திற்கு சரக்கு ரயில் இயக்க முடிவு செய்து, அந்த சேவையை முதல் முறையாக ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று துவக்கியது. சுமார் 2,000 கி.மீ., துாரமுள்ள வங்காளதேசத்தின் எல்லையான பெனபோல் நகர் வரை, இந்த சரக்கு ரயில் போக்குவரத்து செயல்பட உள்ளது.
நேற்று புறப்பட்ட இந்த சரக்கு ரயிலில் ஓசூரில் இயங்கி வரும் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் , தயாரிக்கும் வாகனங்களில் ஒன்றான தோஸ்த் என்கின்ற சிறிய ரக சரக்கு வாகனங்களை , வங்காளதேசத்திற்கு சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பப்பட்டன. இந்த ரயில் மூன்று நாட்களுக்குள் வங்காளதேசத்திற்கு சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.
You'r reading தமிழகத்தில் இருந்து வங்கதேசத்திற்கு நேரடி இரயில் சேவை தொடங்கியது! Originally posted on The Subeditor Tamil