மீண்டும் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு..! மக்கள் அதிர்ச்சி..

கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் அழையா விருந்தாளியாய் சென்று பல லட்சக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. இந்நிலையில் பல கட்ட ஊரடங்கு பிறப்பிக்க பட்ட நிலையிலும் கொரோனா தாக்கம் பல மடங்கு உயர்ந்தது. ஓராண்டிற்கு பிறகு கொரோனா வைரஸ் கட்டுக்குள் அடங்கியதால் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீக்கப்பட்டது.

உலகம் முழுவதும் பழைய நிலை திரும்பினாலும் இந்தியாவில் சில இடங்களான தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனாவின் ஆட்டம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வருகின்ற 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் மகாராஷ்டிராவில் அறிவித்த ஊரடங்கு தமிழகத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது என்று வதந்திகள் வெளியாகி வருகின்றது.

You'r reading மீண்டும் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு..! மக்கள் அதிர்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல பாடகர் மீது பீர் பாட்டில் வீச்சு?? என்ன நடந்தது??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்