தாயின் இறுதிச்சடங்கில் பரிதாபம்: சவப்பெட்டி தலையில் விழுந்து மகன் பலி (வீடியோ)

இந்தோனேசியாவில், தாயின் இறுதிச்சடங்கின்போது சவப்பெட்டி விழுந்ததில் மகன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியாவில் சுவாலே தீவை சேர்ந்தவர் சமேன் கோண்டுரா (40). இவரது தாய் சமீபத்தில மரணமடைந்துவிட்டார். அதனால், தாய்க்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளுக்கு சமேன் ஏற்பாடு செய்தார். அதன்படி, தாயின் இறுதிச்சடங்கு வடக்கு டோரஜா மாவட்டத்தில் பரின்டிங் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்றது. இதற்காக, உடலை சவப்பெட்டியில் வைத்து அதை மூங்கில் ஏணியில் தூக்கி சென்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் மூங்கில் ஏணி சரிந்தது. இதனால், சவப்பெட்டியை தூக்கி சென்றவர்கள் கீழே விழா, அவர்கள் மீது சவப்பெட்டி விழுந்தது.

இதில், சமேனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, சமேனை அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சமேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயுடன் சேர்ந்து மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

You'r reading தாயின் இறுதிச்சடங்கில் பரிதாபம்: சவப்பெட்டி தலையில் விழுந்து மகன் பலி (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ’இடைத்தேர்தல் நடக்கட்டும், சந்திக்கிறேன்’- தங்கத்தமிழ்ச்செல்வன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்