சென்னை சூப்பர் கிங்ஸின் ldquoசிஎஸ்கேrdquo ஆப் வெளியீடு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஎஸ்கே ஆப் அதிகாரப்பூர்பவமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான இரண்டு ஆண்டு தடை முடிந்ததை அடுத்து, இந்த ஆண்டு ஐபிஎஸ் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கும ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா, ஜடேஜா, முரளி விஜய், வெய்ன் பிராவோ, டு பிளிசிஸ் உள்பட முக்கிய வீரர்கள்களமிறங்க உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணியுடன் போட்டியிடுகிறது. இதனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் “சிஎஸ்கே” என்ற ஆப் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. ரவீந்திர ஜடேஜா தொடங்கி வைத்துள்ள இந்த ஆப் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரையில், இந்த ஆப்பை இதுவரையில் 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சென்னை சூப்பர் கிங்ஸின் ldquoசிஎஸ்கேrdquo ஆப் வெளியீடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: 2 பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்