ஐபிஎல் டி20: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் டி20 போட்டியில், ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.

ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்து தொடக்கத்தில் சிறப்பாக ஆடியது.

ஆனால், இதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 19 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில், அதிகபட்சமாக பட்லர் 39 ரன்களை எடுத்தார். கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து, கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், தொடக்க வீரர்களாக லின்&சுனில் நரேன் களமிறங்கி அதிரடியாக ஆடினர். இதில், லின் 45, தினேஷ் கார்த்திக் 41 ரன்களை எடுத்தனர். இறுதியில், 17.5 ஓவர்களில் 4 விக்கெவ் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஐபிஎல் டி20: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து கோர விபத்து: 30 பேர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்