தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட கனிமொழி இன்று விருப்ப மனு தாக்கல்

Kanimozhi to give application For Thuthukudi Lok Sabha Seat

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட திமுக எம்.பி. கனிமொழி இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளிக்கிறார்.

ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள கனிமொழி இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தூத்துக்குடி தொகுதியில் நலத்திட்ட உதவிகள், கிராம சபை கூட்டங்கள், மருத்துவ முகாம்கள் என வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கனிமொழிக்கு எதிராக வலுவான வேட்பாளரை அதிமுகவும் களம் இறக்க உள்ளது. இதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கனிமொழி இன்று அண்ணா அறிவாலயத்தில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்ப மனு அளிக்க இருக்கிறார்.

You'r reading தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட கனிமொழி இன்று விருப்ப மனு தாக்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மின் உற்பத்தி நிலையத்தை ‘அர்ப்பணிக்கும்’ நிகழ்ச்சியால் சர்ச்சை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்