விமானம் புறப்படும்போது டயர் டமால்.. பயணிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படும்போது திடீரென அதன் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று ரன்வேயில் புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்த நிலையில், விமான டயர் பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டயர் வெடித்தால் அதில் இருந்து கிளம்பும் தீப்பொறி தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதற்குள் விமானத்தில் இருந்த பயணிகளை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை அடுத்து, இன்று மாலை 6 மணி வரை ரன்வே மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

You'r reading விமானம் புறப்படும்போது டயர் டமால்.. பயணிகள் அதிர்ச்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘ஜெய் ராம்’ சுலோகம் கூற சொல்லி முஸ்லிம் முதியவர் கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்