தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Tamilnadu 7 districts rainfall in next 3 days
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னை காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று நள்ளிரவு முதல் மாலை வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே,சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், மதுரை,நாகப்பட்டினம்,ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளி லும் நாளை அனல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
-தமிழ்
வட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மக்களே
You'r reading தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil