பெரியாருக்கு யுனெஸ்கோ பட்டம் என பாடப் புத்தகங்களில் பொய்யான தகவல் : உயர் நீதிமன்றம் அரசுக்கு கெடு

பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் "தெற்காசிய சாக்ரடீஸ்" என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவல்களை நீக்கக் கோரி வழக்கு. தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகக்குழு பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 9 வகுப்பு மற்றும் கல்லூரி பாட புத்தகத்தில் "தெற்காசியாவின் சாக்ரடீஸ்" என்று பெரியாருக்கு யுனெஸ்கோ பட்டம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அவ்வாறு எந்த பட்டத்தையும் யுனெஸ்கோ வழங்காத நிலையில் தமிழக அரசின் பள்ளி, கல்லூரி பாட புத்தகங்களில் மட்டும் எப்படி இடம்பெற்றது என்று தெரியவில்லை தெற்காசிய நாடுகள் பட்டியலில் நமது இந்தியா இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மேலும் யுனெஸ்கோவின் முத்திரையை போலியாக பயன்படுத்தி, வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டம் 1970ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தத் தகவல் திட்டமிட்டு அரசியல் ஆதாயத்திற்காக வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தவறான பொய்யான தெளிவற்ற தகவல்களை கற்கும் போது தவறான புரிதல் ஏற்படும். ஆகையால் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்திலும் கல்லூரி பாடத் திட்டத்திலும் பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் தெற்காசிய சாக்ரடீஸ் என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தகவல்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகக்குழு இந்த விவரங்களை பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

You'r reading பெரியாருக்கு யுனெஸ்கோ பட்டம் என பாடப் புத்தகங்களில் பொய்யான தகவல் : உயர் நீதிமன்றம் அரசுக்கு கெடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லி செங்கோட்டை கலவர வழக்கில் முக்கிய குற்றவாளி கைது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்