சென்னையில் நள்ளிரவில் சூறைக்காற்றுடன் கனமழை

சென்னையில் நேற்று இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து, வெயில் சூட்டை தணித்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தாலும், சென்னையில் மட்டும் வெயில் சுட்டெரித்து வந்தது. எப்போது தான் சென்னையில் மழை பெய்யும் என்று மக்கள் புலம்பும் அளவிற்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது.

நேற்று கூட, காலை முதல் மாலை வரை கடும் வெயில் உணரப்பட்டது. அதன் பிறகு, வானிலையில் மாற்றம் ஏற்பட்டு ஒரு சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கின.
இதேபோல், நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்தது.

இருப்பினும், பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

You'r reading சென்னையில் நள்ளிரவில் சூறைக்காற்றுடன் கனமழை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலக கோப்பை கால்பந்து: ஜப்பானை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்த பெல்ஜியம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்