சென்னை திரும்பினார் விஜயகாந்த்: கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்த், இன்று சென்னை திரும்பிய நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது உடல், மெரினாவில் அறிஞர் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இங்கு தினமும், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இதற்கிடையே, கருணாநிதி மறைந்தபோது தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடன், பிரேம லதா மற்றும் மகன் இருந்தனர். கருணாநிதி மறைவு குறித்து தகவல் அறிந்த விஜயகாந்த் மற்றும் பிரேத லதா நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் விஜயகாந்த் கண்ணீர் மல்க தெரிவித்த இரங்கல் செய்தி பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து அமெரிக்காவில் இருந்து இன்று சென்னை திரும்பினார் விஜயகாந்த். பின்னர், விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

You'r reading சென்னை திரும்பினார் விஜயகாந்த்: கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆசிய விளையாட்டுப் போட்டி... இந்தியாவுக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்