திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு கொடுத்த பூண்டி கலைவாணன் - உதயநிதி பெயரிலும் மனு!

Pundi Kalaivanan gave Custom petition on Stalin, Udhayanidhi to contest in Tiruvarur Election

திருவாரூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என பூண்டி கலைவாணன் விருப்ப மனு அளித்துள்ளார். உதயநிதி போட்டியிடவும் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தொகுதியில் வரும் 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து இன்றும் நாளையும் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.

திருவாரூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அம்மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். மேலும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் விருப்ப மனு கொடுத்தார்.

பூண்டி கலைவாணன் போட்டியிட வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் 10 பேர் விருப்ப மனு அளித்தனர். திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர்களிடம் நாளை மாலை வரை மனுக்கள் பெறப்படுகிறது. மனுக்கள் மீது நாளையே பரிசீலிக்கப்பட்டு வேட்பாளரும் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு கொடுத்த பூண்டி கலைவாணன் - உதயநிதி பெயரிலும் மனு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னது உதயநிதி ஜெயிலுக்குப் போனரா? 1977 முதல் அத்தனை போராட்டத்துக்கும் வந்தாரா? விருப்ப மனுவால் ஷாக் ஆன உ.பி.க்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்