ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71). இவர், 43வது அதிபராக பதவி வகித்தவர்.

ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். மனைவியின் இறப்பிற்கு பிறகு ஜார்ஜ் புஷ் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.

இவருக்கு கடந்த மாதம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று உடல் நிலை தேறிய ஜார்ஜ் புஷ் பின்னர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், ஜார்ஜ் புஷ்ஷிற்கு நேற்று மீண்டும் உடல் நலக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜார்ஜ் புஷ் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தூத்துக்குடி துப்பாக்கி சூடு... வாய்திறந்த அமித்ஷா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்