சீனாவில் ரசாயன ஆலை தீ விபத்து - 22பேர் பலி

China chemical plant explosion 22 people killed 22 injured

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சான்ங்ஜியாகௌ பகுதியில் இன்று காலை ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதைத் தொடர்ந்து 38 லாரிகள் மற்றும் 12 கார்களும் வெடித்து சிதறின என தகவல் வெளியானது.

இந்த தீ விபத்திற்கான காரணத்தை விசாரணை செய்து வருவதாக அங்கிருந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்விபத்து நடந்த பகுதிகளில் தீ வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

You'r reading சீனாவில் ரசாயன ஆலை தீ விபத்து - 22பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 14வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஆரம்பம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்