மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..

by Logeswari, Jan 13, 2021, 12:03 PM IST

இந்த பிக் பாஸ் சீசனில் முக்கிய பங்கு பெற்றவர் மொட்டை சுரேஷ். இவர் உள்ளே சென்றதில் இருந்து தனது விளையாட்டை மிக சிறப்பாக விளையாடி மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். முதல் இரண்டு வாரங்களில் இவரது குரல் பிக் பாஸ் வீட்டில் ஓங்கியிருந்தது. கொளுத்தி போடு என்பது இந்த சீசனில் புகழ் பெற்ற வாக்கியம். இந்த வாக்கியத்திற்கு சொந்தக்காரரும் இவர் தான். அதன் பிறகு இவர் எங்கே போனார் என்று எல்லோரும் தேடிக்கொண்டிருந்தோம்.

இவர் அனிதாவுடன் ஆடிய நடனம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. மற்ற போட்டியாளர்கள் மூலம் நாமினேட் செய்யப்பட்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் 100 நாட்களை கடந்துவிட்டது. இதனால் பைனலிஸ்ட் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மற்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் சுரேஷ் தாத்தாவிடம் நீங்கள் எப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எண்டரி கொடுக்க போகிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர்.

இதற்க்கு சுரேஷ் எனக்கு இன்னும் அழைப்பு வரவில்லை அது மட்டும் இல்லாமல் என்னை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் அழைப்பு வந்துள்ளது என்று அதிர்ச்சியான தகவல்களை பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் இந்த சீசன் வெற்றி பெற சுரேஷ் தாத்தாவும் ஒரு மிக பெரிய பங்கு. இருப்பினும் ஏன் அவரை அழைக்கவில்லை என்று இணையத்தளத்தில் விஜய் டிவியை வெச்சி செய்து வருகின்றனர்.

You'r reading மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை