கார் மீது லாரி மோதிய விபத்தில் தேர்வு எழுதச் சென்ற 8 பேர் பலி

by Isaivaani, Jan 22, 2018, 08:17 AM IST

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் காரும் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி போட்டித் தேர்வு எழுதச் சென்ற 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியை சேர்ந்த 9 பேர் போட்டித் தேர்வு எழுதுவதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தனர். தியோகர் பகுதி அருகே சென்றுக் கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மேலும், படுகாயம் அடைந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு, இருவரில் ஒருவர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கோர விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

You'r reading கார் மீது லாரி மோதிய விபத்தில் தேர்வு எழுதச் சென்ற 8 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை