கிரிக்கெட் விளையாட்டின்போது திடீரென மயங்கி விழுந்து வாலிபர் பலி (வீடியோ)

by Isaivaani, Jan 28, 2018, 08:26 AM IST

ஐதராபாத்: பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது 23 வயது வாலிபர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஐதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளூரைச் சேர்ந்த இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. அப்போது, ஒரு அணியைச் சேர்ந்த வாலிபர் லாயிட் அந்தோனி (23) என்பவர் பந்து வீச ஓடி வரும்போது திடீரென மயங்கி விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், உடனடியாக அந்தோனியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அந்தோனி அங்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

அந்தோனி இறந்ததை உறுதி செய்த டாக்டர்கள், அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பதாகவும் கூறினர்.

இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அனைவரிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதன் வீடியோ இதோ.. 

You'r reading கிரிக்கெட் விளையாட்டின்போது திடீரென மயங்கி விழுந்து வாலிபர் பலி (வீடியோ) Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை