பொன்னமராவதியில் கலவரம் 1000பேர் மீது வழக்குப் பதிவு
Riot in Ponnamaravathi case filed against 1000 people
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி கிராமத்தில் ஒரு சமூகத்தினர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு ஆடியோ வெளியானதால் நேற்று பல இடங்களில் இருதரப்பினர் இடையே போராட்டங்கள் வெடித்தன.
கலவரத்தின் போது, பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால், அந்த பகுதியில் பீதி நிலவியது. மேலும், 75 சதவிகித பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதாக 1000 பேர் மீது பொன்னமராவதி போலீசார் வீடியோ ஆதரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பெரிய அளவில் கலவரம் வெடிக்காமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
16 கோடி ரூபாய் செலவு - சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு வெளியிட்ட ஆர்டிஐ தகவல்
You'r reading பொன்னமராவதியில் கலவரம் 1000பேர் மீது வழக்குப் பதிவு Originally posted on The Subeditor Tamil
More Crime News