முஸ்லிம் கைதியின் முதுகில் ஓம் சூடு திகார் சிறை அதிகாரி வெறிச்செயல்

Muslim Prisoner Branded With Om Tattoo on Back in Delhis Tihar Jail

by Mari S, Apr 20, 2019, 10:42 AM IST

டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் கைதி ஒருவரின் முதுகில் சிறை அதிகாரி ஒருவரால் ஓம் என சூடுப் போட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டெல்லியில் உள்ள புதிய சீலம்பூரி பகுதியைச் சேர்ந்த நபீர் என்பவர், ஆயுதங்கள் சப்ளை செய்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

திகார் சிறையின் ஜெயில் சூப்ரிடென்டண்ட் ஒருவர், முஸ்லிம் இளைஞரான நபீர் முதுகில் சமஸ்கிருத ‘ஓம்’ என்ற எழுத்தை காய்த்த கம்பி மூலம் அவரது முதுகில் சூடு போட்டு வரைந்துள்ள சம்பவம், பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த விவாகாரத்தை தீவிரமாக விசாரித்து அந்த அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நபீரை வேறு ஒரு சிறைக்கு உடனடியாக மாற்றவும் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நபீர் வேறு ஒரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஏஐஜி பிஆர்ஓ ராஜ்குமார் கூறியுள்ளார்.

புதிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் அ.ம.மு.க.! பொதுச் செயலாளராகிறார் டி.டி.வி!!

You'r reading முஸ்லிம் கைதியின் முதுகில் ஓம் சூடு திகார் சிறை அதிகாரி வெறிச்செயல் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை