லாரி - கார் மோதி பயங்கர விபத்து : பாஜக எம்எல்ஏ பரிதாப பலி

Feb 21, 2018, 11:24 AM IST

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பாஜக எம்எல்ஏ லோகேந்திர சிங் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் நூர்பூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ லோகேந்தரி சிங். இவர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு இன்று காலை அவரது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவருடன், பாதுகாப்புக்காக இரண்டு போலீசார் இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை சிதாபூர் அருகே கார் சென்றுக் கொண்டிருந்தபோது சாலையில் ஏதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் லோகேந்திர சிங், இரண்டு போலீசார், கார் ஓட்டுனர் என நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், காருக்குள் சிக்கி இருந்த நால்வரையும் மீட்டு இறந்ததை உறுதி செய்தனர். பின்னர், இவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading லாரி - கார் மோதி பயங்கர விபத்து : பாஜக எம்எல்ஏ பரிதாப பலி Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை