ஆம்புலன்சில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் தற்கொலை முயற்சி

ஆம்புலன்சில் வைத்து டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட கொரோனா பாதித்த இளம்பெண் மருத்துவமனையில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் ஆரன்முளாவில் ஆம்புலன்சில் வைத்து கொரோனா பாதித்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடூர் என்ற பகுதியை சேர்ந்த இந்த இளம்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதித்த போது அவருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அன்று இரவு 10 மணியளவில் அவரை மேல்சிகிச்சைக்காக ஆரன்முளா என்ற இடத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.



மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் டிரைவரான நவ்ஃபல் என்பவர் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நிறுத்தி அந்த இளம்பெண்ணை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்தார். ஆம்புலன்சில் வைத்து கொரோனா பாதித்த இளம் பெண்ணை டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் நவ்ஃபலை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த இளம்பெண்ணுக்கு சிறப்பு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில் இன்று மாலை அந்த இளம் பெண்ணின் தாய் துணி காய வைப்பதற்காக அறையை விட்டு வெளியே சென்றிருந்தார். இந்த சமயத்தில் அந்த இளம்பெண் அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். தற்செயலாக அங்கு வந்த ஒரு நர்ஸ் அதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை காப்பாற்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds

READ MORE ABOUT :