நிறுத்தாமல் அழுத 4 வயது மகள் கழுத்தை நெறித்துக் கொன்ற கொடூர தந்தை

நிறுத்தாமல் அழுது கொண்டிருந்த 4 வயது மகளைத் தந்தை கழுத்தை நெறித்து கொடூரமாகக் கொலை செய்தார். உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவ குப்தா (28). இவருக்கு மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், அடுத்ததாக 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள கோடா காலணியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.வாசுதேவ குப்தா ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். வாசுதேவ குப்தாவின் மனைவி நொய்டாவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன் இவர்களிடையே வழக்கம்போல தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வாசுதேவ குப்தாவின் மனைவி, 3 வயது மகனை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்குச் சென்றார் என்று வாசுதேவால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் 20 நாட்களுக்கு மேலாகத் தனது 4 வயது மகளுடன் வாசுதேவ் தவித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு அவரது மகள் நிறுத்தாமல் அழுது கொண்டிருந்தது. எவ்வளவோ முயற்சித்தும் மகளின் அழுகையை வாசுதேவால் நிறுத்த முடியவில்லை. ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற கோபம் இருந்ததால் ஆத்திரமடைந்த வாசுதேவ், மகளின் கழுத்தை நெறித்துள்ளார். இதில் சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது.பின்னர் குழந்தையின் உடலை ஒரு துணியில் சுற்றி ஆட்டோவில் வைத்து வெளியே சென்றார். தன்னுடைய மனைவி பணிபுரியும் அழகு நிலையம் உள்ள பகுதிக்குச் சென்று மனைவியை நீண்ட நேரமாகத் தேடிப் பார்த்தார்.

மனைவியைக் கண்டுபிடித்து அவரிடம் மகளின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்பது தான் வாசுதேவின் திட்டமாக இருந்தது. இந்த சமயத்தில் வாசுதேவின் தம்பி ரவி என்பவர் அவருக்கு போன் செய்தார். அப்போது, தான் மகளைக் கொலை செய்து விட்டதாகக் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரவி, உடனடியாக போலீசிடம் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று வாசுதேவை கைது செய்து சிறுமியின் உடலை மீட்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds

READ MORE ABOUT :