பிறந்து 24 நேரமே ஆன பச்சிளங் குழந்தை.. கழிப்பறையில் துடிக்க துடிக்க கழுத்தை நெறித்து கொலை..

காஞ்சிபுர மருத்துவமனையில் பிறந்த குழந்தையை கழிப்பறையில் வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

by Logeswari, Nov 3, 2020, 12:47 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மாதா கோவிலை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவருக்கு 24 வயதில் குஷ்பு என்ற மகள் உள்ளார். குஷ்பு சில நாட்களாக வயிற்று வலியால் துடித்துள்ளார்.இதனால் நேற்று பயங்கர வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் குஷ்புவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர் குஷ்புவை சோதித்து பார்த்து விட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். நள்ளிரவில் இவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. தாயும் சேயும் ஆரோக்கியம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருக்கும் கழிப்பறையை சுத்தம் செய்ய ஆட்கள் சென்ற பொழுது ஏதோ கைகள் அசைவதை கண்டு கூச்சல் போட்டனர். அனைவரும் திரண்டு வந்து கழிப்பறையில் பார்த்த பொழுது ஒரு பச்சிளங் குழந்தை இருந்தது. அந்த குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து சில மணி நேரம் ஆகி இருக்கும் என்று தெரிவித்தனர்.

இது குறித்து மருத்துவனையில் இருந்து போலீஸ்க்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை பற்றி விசாரிக்க போலீஸ் முதல் கட்டமாய் கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்தனர். அதில் குஷ்பு தான் குழந்தையை கொண்டு சென்றது பதிவாகியுள்ளது. இதைப்பற்றி குஷ்புவிடம் விசாரித்த பொழுது கிடுக்கிடும் தகவல்களை கூறினார். குஷ்பு என்பவர் கல்யாணம் செய்து கொள்ளாமல் யாரோ ஒருவரிடம் தொடர்பில் இருந்து கர்ப்பமாகியுள்ளார். இதனை வீட்டில் மறைக்க வயிற்று வலி என்று பொய் சொல்லி பெற்றோரரை ஏமாற்றியுள்ளார். குழந்தை பிறந்தது பெற்றோருக்கு தெரியாமல் இருக்க குழந்தையை கழுத்து நெரித்து கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் குஷ்பு மேல் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

You'r reading பிறந்து 24 நேரமே ஆன பச்சிளங் குழந்தை.. கழிப்பறையில் துடிக்க துடிக்க கழுத்தை நெறித்து கொலை.. Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை