தாயின் கள்ள காதலன் பாலியல் பலாத்காரம் - குழந்தை பெற்ற 17 வயது மகள்!

தாயின் கள்ளக்காதலன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால், 17 வயது சிறுமி குழந்தை பெற்றதை அடுத்து, சிறுமியின் தாயும், கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mar 31, 2018, 12:01 PM IST

தாயின் கள்ளக்காதலன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால், 17 வயது சிறுமி குழந்தை பெற்றதை அடுத்து, சிறுமியின் தாயும், கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ராமலட்சுமி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை விட்டு கடந்த சில ஆண்டுக்கு முன்பு பிரிந்துவிட்டார். ராமலட்சுமி தனது கனகாவையும் தன்னுடன் அழைத்து வந்ததோடு இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ராமலட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இதனையடுத்து, ராமலட்சுமி, கனகா ஆகியோருடன் ரமேஷும் தொடர்ந்து ஓரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

அப்போது, கனகாவை ரமேஷ் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், கனகா கர்ப்பமாகி உள்ளார். சில மாதங்களாக கனகாவின் உடலில் மாற்றம் தெரிந்ததை அடுத்து, அவரது தாயார் கேட்டபோதெல்லாம் கனகா ஒன்னுமில்லை என கூறி சமாளித்துள்ளார்.

ஒருகட்டத்தில், கனகா கர்ப்பமான விஷயம அவரது தயார் ராமலட்சுமிக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அதற்குக் காரணம் ரமேஷ்தான் என்று சொன்னதும் ராமலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து ராமலட்சுமி, ரமேஷ் உடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி, கனகாவுக்குப் பெண்குழந்தை பிறந்துள்ளது. மேலும், இந்த விவரம் அருகில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக, வேறு உறவினர்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரமேஷையும், மகாலட்சுமியையும் கைது செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தாயின் கள்ள காதலன் பாலியல் பலாத்காரம் - குழந்தை பெற்ற 17 வயது மகள்! Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை