தோட்டத்தில் 80 வயது மூதாட்டிக்கு நிகழ்ந்த அநியாயம்..! கேட்க யாரும் இல்லையா??
பொள்ளாச்சியில் 80 வயது கிழவியை துடிக்க துடிக்க பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. நேற்று அவரது தோட்டத்தில் அமர்ந்து தென்னை ஓலையை கிழித்து வந்துள்ளார். அதே கிரமத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவருக்கு வயது 32 இருக்கும். அப்பொழுது மூதாட்டியின் தோட்டமாய் சென்று கொண்டிருந்த வெள்ளிங்கிரி மூதாட்டியை காம வெறியில் பார்த்து கொண்டிருந்துள்ளார்.
யாரும் இல்லாத நேரமாய் பார்த்து மூதாட்டியின் வாயில் துணியை வைத்து அடைத்து கொடூரமான முறையில் கதற கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கிழவியின் முனுகல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் எல்லோரும் வருவதை அறிந்த வெள்ளிங்கிரி சம்பவ இடத்தை விட்டு யாரு கண்ணுக்கும் சிக்காமல் தப்பித்துவிட்டார். இதை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் மூதாட்டியிடம் நடந்தவற்றை விசாரித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூதாட்டி கொடுத்த வாக்குமூலத்தில் வெள்ளிங்கிரி என்பவர் தான் இக்கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்று போலீஸ் தெள்ளத்தெளிவாக கண்டுபிடித்தது. 80 வயது மூதாட்டியை கற்பழித்த குற்றத்திற்காக தலைமறைவாக இருந்த காமக்கொடூரனை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கற்பழிப்பு சம்பவம் பிஞ்சி குழந்தையில் இருந்து 90 வயது மூதாட்டி வரை அனைவருக்கும் நடந்து கொண்டு வருகிறது. இதற்கு எப்பொழுது முடிவு காலம் வரும் என்பது தெரியவில்லை.
You'r reading தோட்டத்தில் 80 வயது மூதாட்டிக்கு நிகழ்ந்த அநியாயம்..! கேட்க யாரும் இல்லையா?? Originally posted on The Subeditor Tamil
More Crime News