ஆந்திராவில் வேகமாக பரவும் மர்ம நோய்க்கு ஒருவர் பலி.. சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை

ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில நாட்களாக ஒரு மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று விஜயவாடா மருத்துவமனையில் இந்நோய் பாதித்த ஒருவர் மரணமடைந்தார். இதையடுத்து சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வரும் ஒரு மர்ம நோய் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென மயக்கம் போட்டு விழுவது, வாந்தி, குளிர் காய்ச்சல் போல உடலில் உதறல் ஏற்படுவது ஆகியவை தான் இந்நோயின் அறிகுறிகளாகும்.

கடந்த இரு தினங்களில் மட்டும் 270 க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதித்து விஜயவாடா உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் இந்நோய் அதிகமாக பரவி வருகிறது. இதையடுத்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். நோய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் யாருக்கும் வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனாலும் நோய்க்கு என்ன காரணம் என்று இதுவரை சுகாதாரத் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் விஜயவாடா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட 45 வயதான ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இது பொதுமக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விஜயவாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் அவர், சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நோய் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த 5 பேர் அடங்கிய ஒரு டாக்டர்கள் குழு விரைவில் ஆந்திராவுக்கு வர உள்ளதாக பாஜக எம்பி நரசிம்மராவ், ஆந்திர தலைமை செயலரிடம் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :