மதபோதனை பெயரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. போலீஸுக்கு ஆட்டம் காட்டும் ஆசாமி..!

by Logeswari, Dec 8, 2020, 18:32 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை கடத்தி சென்ற மதபோதகரை போலீஸ் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரை சார்ந்தவர் ஜெயராஜ். இவருக்கு வயது 49 இருக்கும். இவர் ஜவ்வாது மலையில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கிறிஸ்துவ மதபோதகராக திகழ்ந்துள்ளார். இவரது மேல் உள்ள மரியாதையில் மலைவாசிகள் தங்களின் பிள்ளைகளை பாடம் கற்பிக்க ஜெயராஜ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவருக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆகியுள்ளது. ஆனால் இரண்டு மனைவியிடமும் இருந்து விவாகரத்து பெற்று இப்பொழுது தனியாக தான் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி அவரிடம் 9 ஆம் வகுப்பு பயின்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்றதாக தகவல் ஊர் முழுவதும் பரவியது. சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை தேடி ஊர் முழுக்க அலைந்தும் கிடைக்காததால் ஊருக்கு பக்கத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் ஜெயராஜ் பெயரில் புகார் அளித்தனர். போலீஸ் புகாரை தொடர்ந்து விசாரிக்கும் பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

அதாவது ஜெயராஜ் பாடம் கற்பிக்க வருகின்ற அனைத்து மாணவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளது தெரியவந்தது. போலீஸ் ஜெயராஜை ஒரு மாதமாக தேடி அலைந்து வருகின்றனர். ஆனால் ஜெயராஜ் இன்னும் போலீஸ் கைகளுக்கு கிடைத்தபாடில்லை. பெற்ற மகளை காணாத துக்கத்தில் சிறுமியின் பெற்றோர்கள் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் போலீஸிடம் தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தருமாறு கெஞ்சி வருகின்றனர்.

You'r reading மதபோதனை பெயரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. போலீஸுக்கு ஆட்டம் காட்டும் ஆசாமி..! Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை