இலங்கையிலிருந்து 10 கிலோ தங்கம் கடத்தல்: ராமேஸ்வரத்தில் 5 பேர் கைது

by Balaji, Dec 11, 2020, 20:00 PM IST

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்கம் ராமேஸ்வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மண்டபம் வந்த வருவாய் புலனாய்வுத் துறையினர் மண்டபம் கடலோர காவல் படையினருடன் இணைந்து மன்னார் வளைகுடா தீவுப் பகுதியில் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு படகை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் அந்த படகு படகில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து படகை மண்டபம் சுங்கத்துறை அலுவலதிற்கு கொண்டு வந்து சோதனை செய்தனர். படகில் 10 கிலோ தங்கம் இருந்து தெரியவந்தது. இதனை தொடர்ந்து 10 தங்கத்தை பறிமுதல் செய்து அதை கடத்தி வந்த 5 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தங்கம் இலங்கை இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்டது ம் படகில் வந்தவர்கள் மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

You'r reading இலங்கையிலிருந்து 10 கிலோ தங்கம் கடத்தல்: ராமேஸ்வரத்தில் 5 பேர் கைது Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை