கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொடுரமாக கொலை செய்த மனைவி..

திருப்பத்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவன் மற்றும் 2 குழந்தைகளை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

by Logeswari, Dec 15, 2020, 17:24 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமநாயக்கன் பட்டியை சார்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பிரியா. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் வீட்டின் வறுமைக்காக சசிகுமார் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்துள்ளார். குழந்தைகளிடம் தினமும் வீடியோ காலில் பேச சசிகுமார் வெளிநாட்டில் இருந்து போன் வாங்கி அனுப்பியுள்ளார். ஆனால் பிரியா போனில் டிக் டாக், முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கும் பல ஆண்களிடம் பேசி வந்துள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல் வெளிநாட்டில் இருந்து கணவன் அனுப்புகின்ற பணத்தையெல்லாம் பல ஆண்களுடன் ஊர் சுற்றி செலவு செய்து வந்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு சசிகுமார், மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது தான் அவருக்கு தனது மனைவியின் தவறான செயல்கள் பற்றி தெரிந்துள்ளது. இதை குறித்து மனைவியிடம் எச்சரித்துள்ளார். கணவர் வீட்டிலே இருப்பதால் பிரியா அவரது கள்ள காதலர்களை சந்திப்பதில் சிரமமாக இருந்துள்ளது. இதனால் தாலி கட்டிய கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்கு ஒரு மாதம் முன்னரே பெட்ரோலை வாங்கி யாருக்கும் சந்தேகம் வராதவாறு வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த கணவர் மற்றும் குழந்தைகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து நெருப்பை அணைத்து மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி கணவன் சசிகுமார் மருத்துவமனையில் இறந்து விட்டார். இரண்டு குழந்தைகளும் உயிருக்கு போராடி வருகின்றனர். இதனால் பிரியாவை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You'r reading கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொடுரமாக கொலை செய்த மனைவி.. Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை